தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே அவருடைய உருவ பொம்மைக்கு அ.தி.மு.க.வினர் தீவைத்து எரித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ரா. கார்த்திகேயன், நகரசபை தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அ.மலைஅய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பிரகாசம், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் பாரதி, நகர துணை செயலாளர் சுப.ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார், நகர அவை தலைவர் பா.தேவராஜன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் பி.எஸ்.பிரபு, நகர பாசறை செயலாளர் பாண்டியராஜன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.