பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேச்சு போட்டி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்

Posted August 20, 2015 by Adiraivanavil in Labels:
, முத்துப்பேட்டை பேரூராட்சியில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் நடைப்பெற்றது. செயல் அலுவலர் கண்மணி முன்னிலையில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்து தேசியக்கொடியை
ஏற்றி வைத்தார். பின்னர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேச்சு போட்டி நடத்தப்பட்டது இதில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர் மேலும் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சி திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் பற்றி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “ பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேச்சு போட்டி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்”