திருமாவளவனை கொல்ல சதி: சென்னை என்ஜினீயரிங் மாணவர்கள் கைது- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
Posted August 22, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் ஒரத்தநாட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடசேரி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற திட்டமிட்டிருந்தார்.
கொடியேற்று விழாவிற்கு வரும் திருமாவளவன் கார் மீது கற்களை வீசி சில இளைஞர்கள் வாட்ஸ் அப் மூலம் தகவலை பரிமாறியது தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட போலீசார் வடசேரியில் குவிக்கப்பட்டனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள் வடசேரி – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஆலத்தூர் புதுக்குளம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி திருமாவளவனின் கார் மீது கற்களை வீச காத்திருந்தனர்.
அங்கு விரைந்து சென்ற போலீசார் அரைக்கால் சட்டையுடன் திரண்டிருந்த இளைஞர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அப்போது அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், காந்தி ஆகியோர் காயமடைந்தனர்.
அந்த கும்பல் 50–க்கும் மேற்பட்ட கருங்கற்கல், பெட்ரோல் குண்டுகள், காலிபீர் பாட்டில்களை வைத்திருந்தனர். அவைகளை போலீசார் கைப்பற்றி 12 பேரை கைது செய்தனர்.
இதுபற்றி திருமாவளவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரியில் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று கொண்ட திருமாவளவன் மன்னார்குடி ஒன்றியம் வடபாதியில் நடந்த கட்சி நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை வழியாக சென்றார்.
கைது செய்யப்பட்ட 12 பேரில் மணிகண்டன், அன்பானந்தன் ஆகியோர் சென்னையில் என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் ஐ.டி.ஐ மற்றும் கல்லூரி மாணவர்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஒரத்தநாட்டு போலீஸ் நிலையத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. சஞ்சய்குமார் பிறப்பித்துள்ளார்.
news by malaimalar
0 comment(s) to... “திருமாவளவனை கொல்ல சதி: சென்னை என்ஜினீயரிங் மாணவர்கள் கைது- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்”