முத்துப்பேட்டையில் மாற்று இடம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
Posted August 27, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
மாற்று இடம் வழங்க கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பட்டறை குளக்கரையில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். இவர்களுடைய வீடுகள் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி, முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வீடுகளை இடித்து அகற்றினர். இவர்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும், அதேபோல் பட்டுக்கோட்டை சாலை ஓடக்கரையில் வசித்து வரும் குடும்பங்கள் வசிப்பதற்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.வினர் நேற்று முத்துப்பேட்டையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம்
உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன் வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜபருல்லா, கிருஷ்ணன், ரெத்தினகுமார், ஜெய்புனிசா பகுருதீன், செல்விதம்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. பேச்சாளர் தஞ்சை மன்னர்மன்னன், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, வர்த்தகர் கழக தலைவர் ராஜாராமன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜெகபர்அலி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் அகமதுஇபுராகிம், தமீம், நகர அவை தலைவர் ராமஜெயம், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் சக்திதேவிபுரட்சிவாணன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் நவாஸ்கான் நன்றி கூறினார்.
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் மாற்று இடம் வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரதம்”