அதிரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Posted August 26, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் அண்மையில் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
முகாமை வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் டேவிட் சார்லஸ் முன்னிலை வகித்தார்.
முகாமில் மனநல மருத்துவர் சித்ராதேவி, கண் மருத்துவர் ராஜசேகரன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அன்பழகன், மருத்துவர் ராமசாமி மற்றும் 19 சிறப்பாசிரியர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை, கண்ணாடி, இலவச காதொலிக் கருவி, மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெற்றிடவும், உதடு பிளவு, எலும்பு சார்ந்த இலவச அறுவை சிகிச்சைகள் பெற்றிடவும் ஆலோசனைகள் வழங்கினர்.


0 comment(s) to... “அதிரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்”