இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்புதுடெல்லி, ஆக. 15-

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை தனது முதல் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு கவுரவித்து வரும் கூகுள் நிறுவனம், இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரையை கவுரவிக்கும் வகையில், டூடுல் படம் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி கூகுள், தனது முகப்பு பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் படத்தில், காந்தியடிகள் 1930ல் தண்டி யாத்திரையை வழிநடத்திச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, காந்தியடிகள் குஜராத்தின் தண்டிக்கு நடைபயணமாக யாத்திரை சென்று உப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்தினார். ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கமான இந்த போராட்டம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், அதனை டூடுல் படம் மூலம் தனது பயன்பாட்டாளர்களுக்கு கூகுள் விளக்கியுள்ளது.


0 comment(s) to... “இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்”