தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல் நடித்த தொண்டர் திடீர் சாவு
Posted August 16, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
ஆர்ப்பாட்டத்தின் போது ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வார்டு செயலாளர் சேட்டு என்கிற செல்வராஜ் என்பவர் மது குடித்ததால் இறந்து போனது போல் சித்தரித்து பிணமாக நடித்தார். அப்போது பிணத்துக்கு வைப்பது போல் அவரது நெற்றியில் ஒரு ரூபாய் காசு ஒட்டப்பட்டது.
மேலும் வாய்க்கட்டு கட்டி பிளாஸ்டிக் நாற்காலியில் பிணத்தை அமர வைப்பது போன்று அமர வைத்தனர். பின்னர் அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவது போன்று தத்ரூபமாக நடித்தனர்.
இந்த நிலையில் மறுநாள் காலையில் சேட்டுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவரை நேற்று முன்தினம் ஆத்தூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சேட்டு பரிதாபமாக இறந்தார்.
இறந்தது போல் நடித்த சேட்டு உண்மையிலேயே இறந்து விட்ட சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியையும், உறவினர்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0 comment(s) to... “தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல் நடித்த தொண்டர் திடீர் சாவு”