முத்துப்பேட்டை தர்கா டிரஸ்டியின் தாயார் ஹைருன்னிஸா நாச்சியா நாற்பதாம் பாத்திஹா நிகழ்ச்சி.

Posted August 27, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்கா மறைந்த எஸ்.எஸ்.சாகுல் ஹமீது சாகிப் மனைவியும், மறைந்த எஸ்.எஸ்.ஜெய்லானி சாகிப், தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப், எஸ்.எஸ்.சித்தி பரிதா பேகம், எஸ்.எஸ்.பரக்கத் அலி சாகிப், எஸ்.எஸ்.நிசார் அகமது சாகிப், ஆகியோரது தயாருமான எஸ்.எஸ்.ஹைருன்னிஸா நாச்சியா சென்ற மாதம் 16-ம் தேதி காலமானார். அவரின் நாற்பதாம் நாள் பாத்திஹா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஹைருன்னிஸா நாச்சியா பேரில் திருகுர்ஆன் சரீப் ஓதி தமாம் செய்து மறு உலக வாழ்விற்கும் துஆ செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், மாவட்ட மாணவர் அணி ஜாம்பை ராமஜெயம், பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா, மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், நகர அ.தி.மு.க இளைஞர் அணி செயலாளர் மருது ராஜேந்திரன், அ.தி.மு.க நிர்வாகி சிவராமன், தமிழக போட்டோ, வீடியோ சங்க நிர்வாகி கண்ணன், இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், த.மா.கா மாவட்ட துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், ராஜேந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர் அலி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள,; கிராம முக்கிய பொருப்பாளர்கள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை தர்கா டிரஸ்டியின் தாயார் ஹைருன்னிஸா நாச்சியா நாற்பதாம் பாத்திஹா நிகழ்ச்சி.”