பட்டுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
Posted August 16, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர். நாடிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், மேலிடப் பார்வையாளர் சு. ராஜாதம்பி முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலர் எஸ். நாராயணன், மாவட்டச் செயலர்கள் ஆர். முருகையன், கோவி. செந்தில், எம்.ஆர். ராஜேந்திரன், எம். ஏ. மகாலிங்கம், மாவட்ட இணைச்செயலர் க. அன்பழகன், வட்டாரத் தலைவர்கள் எம். கல்யாணசுந்தரம், வி.எம். காசிநாதன் (பட்டுக்கோட்டை), ஏ.ஆர்.எம். யோகானந்தம் (மதுக்கூர்), நகரத் தலைவர்கள் வி.என். ராஜூ (பட்டுக்கோட்டை), தேவதாஸ் (மதுக்கூர்) மற்றும் மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த விஜயா, லெட்சுமி உள்ளிட்ட 25 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில்......
பேராவூரணி தொகுதி காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஆர். சிங்காரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர்கள் ஏ. முருகன், ஏ. ஷேக்இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.கே. பாலசுப்பிரமணியன், கே.வி. கிருஷ்ணன், ஜெ. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்”