முத்துப்பேட்டை அருகே போலீஸ் பாதுக்காப்புடன் -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு! பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகை, பரபரப்பு..!

Posted August 23, 2015 by Adiraivanavil in Labels:

 முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பரப்பி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து அவரின் கொடும்பாவியை கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிதாசன் தலைமையில் அதிமுகவினர் தீ வைத்து எரித்தனர். முன்னதாக குன்னலூர் சாலையிலிருந்து போலீஸ் பாதுக்காபுடன் இளங்கோவன் கொடும்பாவியை பாடைக்கட்டி அதிமுகவினர் தூக்கி வந்தனர.; பின்னர் பாண்டி கடைதெரு கிழக்கு கடற்கரை சாலை நடுவே இளங்கோவன் கொடும்பாவியை வைத்து பெண்கள் வேலக்கமறால் அடித்தும், பின்னர் ஒப்பாரி வைத்தும் இளங்கோவனுக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு அதிமுகவினர் இளங்கோவன் கொடும்பாவியை தீயிட்டு எரித்தனர். இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த போலீசார் கொடும்பாவி அணையும் நேரத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் சில மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் இரணியன், ஒன்றிய துணைச்செயலாளர் அய்யப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெகன், உலகநாதன், கந்தவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜமாணிக்கம், குமரவேல், ஜெயராமன், இளம்பாசறை அணி செயலாளர் அர்ச்சுனன், துணைச்செயலாளர் அய்யப்பன், மற்றும் கிளைச் செயலாளர்கள் செந்தில், அகிலன், பாண்டுபூபதி, சாமித்துரை, எம்.ஜீ.ஆர்.மன்ற நிர்வாகி ரவி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் போலீஸ் பாதுக்காப்புடன் நடந்த இந்த போராட்டத்தால் நேற்று பொதுமக்கள் மத்தியில் போலீஸ் மீது அதிருப்தி அடைந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது 
படம்செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே போலீஸ் பாதுக்காப்புடன் -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு! பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகை, பரபரப்பு..!”