9ம் வகுப்பு மாணவிக்கு குவா குவா பட்டுக்கோட்டை வாலிபருக்கு வலை

Posted August 31, 2015 by Adiraivanavil in Labels:
பவானி, ஆக.31-
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் மீரா (15). (பெயர் மாற் றம்). 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் வயிற்றுவலி ஏற்ப ட்டது. பவானி அரசு மருத்துவமனையில் சேர் க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது மீராவுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மீரா பள்ளி மாணவி என்பதும், 15 வயதே ஆகி றது என்பதையறிந்த மருத்துவர்கள், செவி லியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி யிடம் விவரம் கேட்டபோது, ‘10 மாதங்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும், தற்போது அவர் எங்கு ள்ளார்? என்பது தெரியவி ல்லை’ என்றும் கூறினார். இதுகுறித்து, பவானி அனை த்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மகளிர் போலீசார் விசா ரணை நடத்தினர். இதில் பவானியில் கரும்புச்சாறு விற்பனை செய்து வந்த விஜய்க்கு திருமணமாகி, மனைவி கர்ப்பிணியாக உள்ளதும், மாணவியின் வீட்டு பக்கத்தில் அவர் கள் வசித்து வந்ததும் தெரிந்தது. மீராவின் தாய் நெசவு வேலைக்கு சென்று விடுவார். அப்பா வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இதனால் மீரா சரியான கவனிப்பு இல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி, விஜய் அத்துமீறியது தெரியவந்தது. மீரா தனக்கு பிரசவ வலி ஏற்படும் நாள் வரையில் பள்ளிக்குச் சென்று வந்துள் ளார். வயிறு பெரியதாக தெரியாததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சமீபத்தில் விஜய் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டார். அவர் சொந்த ஊரான பட்டுக்கோட்டை சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது தாயும், சேயும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.


0 comment(s) to... “9ம் வகுப்பு மாணவிக்கு குவா குவா பட்டுக்கோட்டை வாலிபருக்கு வலை”