விஷம் குடித்த விவசாயி சாவு

Posted August 16, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு வயிற்று வலியால் அதிகமானதால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன், வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். 


இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் இறந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 


0 comment(s) to... “விஷம் குடித்த விவசாயி சாவு”