மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது
Posted August 16, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை டி.எஸ்பி.அருண் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது டாஸ்மாக் மதுகடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த முருகன், சந்தானம், கார்த்திகேயன், மணிகண்டன், ஆனந்த வள்ளி, அருணகிரி , பாலசுப்பிரமணியன் ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்து இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 comment(s) to... “மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது”