இந்திய மாணவர் சாதனை-விண்வெளியில் குட்டி வியாழன் கிரகம் கண்டுபிடிப்பு

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
விண்வெளியில் குட்டி வியாழன் கிரகம் கண்டுபிடிப்பு: இந்திய மாணவர் சாதனைவாஷிங்டன், ஆக. 15–
அமெரிக்காவில் ஜெமினி பிளானெட் இமேஜர் எக்சோ பிளானெட் சர்வே என்ற குழு விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது சூரிய குடும்பத்துக்கு வெளியே வியாழன் போன்று புதிய கிரகத்தை கண்டுபிடித்தனர்.

எனவே அக்கிரகம் குட்டி வியாழன் என அழைக்கப்படுகிறது. இதற்கு '51 எரிடானி பி' என பெயரிட்டுள்ளனர். அது பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்பிரதேசமாக உள்ளது.
இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்த குழுவில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர் இடம் பிடித்துள்ளார். அவரது பெயர் ராகுல் ஐபடேல். இவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தின் அறிவியல் மற்றும் வானியல் துறையில் டாக்டர் பட ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இது குறித்து மாணவர் ராகுல் ஐபடேல் கூறியதாவது:–
"சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களின் சுற்றுப் பாதையில் அமைந்துள்ள சிறு கோள் படையில் வெப்பமான தூசு மூடப்பட்டிருந்த நிலையில் ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தோம்.
இவ்வாறு ஒரு நட்சத்திரத்தை தூசு சூழ்ந்திருந்தால் அங்கே ஒரு கிரகம் இருக்கும் என்பது பொதுவான கருத்து. பெரிய அளவில் உள்ள சிறிய கோள்கள் மோதும்போது இது போன்ற தூசு உண்டாகும். எனவே அங்கு இந்த புதிய குட்டி வியாழன் கிரகத்தை கண்டுபிடித்தோம்" என்றார்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து இவரும், இவரது பேராசியர் ஸ்டானிமிட் மெட்சேவ்வும் எழுதிய கட்டுரை 'சயின்ஸ்' என்றும் அறிவியல் ஆய்விதழில் வெளியாகி உள்ளது.


0 comment(s) to... “இந்திய மாணவர் சாதனை-விண்வெளியில் குட்டி வியாழன் கிரகம் கண்டுபிடிப்பு”