அதிரையில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.-பொதுமக்கள் அவதி

Posted August 19, 2015 by Adiraivanavil in Labels:
அதிரையில் கடந்த சில நாட்களாக ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.
அதிரையில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மாலை வரை இதே நிலை நீடித்தது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக ஆக பலத்த மழையாக கொட்டியது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் 3 வது வார்டு பகுதியில் 4 வது வார்டு பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.






0 comment(s) to... “அதிரையில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.-பொதுமக்கள் அவதி”