பட்டுக்கோட்டை பகுதிகளில் விரைவில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
Posted August 26, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இதுகுறித்து தஞ்சாவூர் வேளாண்மை வணிகத் துணை இயக்குநர் ஆர். கலியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த நிறுவனம் ஜனநாயக முறையில் உறுப்பினர், விவசாயிகளால் மட்டுமே சுயமாக நிர்வகிக்கப்படுவதால், தென்னை விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், இடுபொருள்கள் மற்றும் நேரடிச் சந்தை வாய்ப்புகளுக்கான தகவல்களை தேவைப்படும் நேரத்தில் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இந்நிறுவனத்தில் விவசாயிகள் மட்டுமே உறுப்பினராக முடியும். தனி விவசாயியாக செயல்படுவதை விட உற்பத்தியாளர் அமைப்பு என்ற தளத்தில் குழுவாக விவசாயம் மேற்கொள்ளும்போது, சிக்கனமாக அதே சமயம் சரியான அளவில் இடுபொருள்களை உபயோகிப்பதும், ஒன்றுபட்டு ஒரே மாதிரியான விளைபொருள்களை விளைவிப்பதும், அரசு மற்றும் தனியார்த்துறை உதவியுடன் உரிய விலை பெறவும் சாத்தியமாகிறது.
இவ்வாறு தென்னை விவசாயிகள் ஒரு அமைப்பின்கீழ் செயல்படும்போது நபார்டு வங்கி ரூ.1 கோடி வரை கடன் வழங்குகிறது. 3 ஆண்டுகள் வரை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை வழி நடத்த மத்திய, மாநில அரசுகளும் நிதி உதவி செய்கின்றன.
எனவே, இப்பகுதி தென்னை விவசாயிகள் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து தாங்கள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கும் தகுதியை பெற முயற்சிக்க வேண்டும். மேலும், விரிவான விளக்கம் பெற பட்டுக்கோட்டை வேளாண்மை வணிக அலுவலரை 9442889344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை பகுதிகளில் விரைவில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்”