அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை

Posted August 12, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட தடகள(ஓட்டப்பந்தயம், அஞ்சல் ஓட்டம், நீளம் தண்டுதல்,தடை தாண்டுதல்,வட்டு எரிதல்,குண்டு 
எரிதல்,உயரம் தாண்டுதல்,மும்முறை தாண்டுதல்) போட்டிகள் 06/08/2015 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை புனித தாமஸ் மேனிலைப்பள்ளியிலும், 10/08/2015 திங்கட்கிழமை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலும் நடைப்பெற்றது. அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்துக்கொண்டு 67 புள்ளிகள் பெற்று குறுவட்ட அளவில் முதலாமிடம் பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்தனர். மேலும் இவர்கள் மாவட்ட தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் மஹ்பூப் அலி , உதவி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக பணியார்கள் பாராட்டினர்.

இதில் இரண்டாமிடம் பிருந்தாவனம் மேனிலைப்பள்ளிக்கும், மூனறாமிடம் கரம்பயம் அரசு மேனிலைப்பள்ளிக்கும் கிடைத்தது.மொத்தம் 57 பள்ளிகள் கலந்துக்கொண்டன.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை”