வார சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல். அதிகாரிகள் நடவடிக்கை.

Posted August 22, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சென்ற ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதன்படி நகர முழுவதும் விளம்பர வாகனங்கள் மூலமும,; விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை வார சந்தையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடைகளில் பயன்படுத்திய பாலிதீன் பைகள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி கூறுகையில்: முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் இல்லாத பகுதியாக மாற்ற கடந்த ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளுக்கு தடை செய்யப்பட்டது. அதன்படி இன்று(நேற்று) வார சந்தையில் அதிரடி சோதனை நடத்தி பாலிதீன் பைகள் கைபற்றப்பட்டது. விரைவில் கடைத்தெருக்களிலும் அதிரடி சோதனை நடத்தப்படும். வியாபாரிகள் பாலிதீன் பைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றார்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை 


0 comment(s) to... “வார சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல். அதிகாரிகள் நடவடிக்கை.”