அதிரையில்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால்-பரபரப்பு

Posted August 29, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட3 வது வார்டைச் சோர்ந்த பகுதி சுப்பரமணியர் கோவில் தெரு இந்தப்பகுதியில் மின் கம்பத்தில் சென்ற  கம்பிகளில் ஒரு கம்பி திடீரென அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது வீடுகள் மீது மின் கம்பி விழவில்லை. மேலும் மதியம் நேரம் என்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து 3 வது வார்டைச் சோர்ந்த கவுன்சிலர் சிவக்குமார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதைதொடர்ந்து மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிராம்பட்டினம் பகுதியில் பெரும்பாலான மின் கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டு இருக்கிறது. மேலும் மின் கம்பங்களும் பழுதடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று மதியம் மின் கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து கீழே விழுந்து விட்டது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  என்று கூறினர்.




0 comment(s) to... “அதிரையில்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால்-பரபரப்பு”