அதிரையில் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
Posted December 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் தம்பிக்கோட்டை சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையில் உள்ள பகுதியை ஒட்டி கிழக்கு கடற்கரை செல்கிறது இந்த கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரிவு சாலைகள் ஏராளமாக உள்ளன இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில்
தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் கனரகவாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் என பல்வேறு வாகனங்கள் செல்கின்றன இதனால் தினந்தோறும் வாகனம் நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருகிறது இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள பிரிவு சாலைகளிலிருந்தும் ஏராளமான வாகனங்கள் கிழக்கு கடற்கரைசாலையில் செல்வதால் மேலும் வாகன நெரிசல் ஏற்பட்டு எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது இந்தநிலையில் பிரிவு சாலைகளில் வேகத்தடை இல்லாததால் அங்கிருந்து வரும் வாகனங்கள் வேகத்தைக்குறைக்காமல் கிழக்கு கடற்கரைசாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருகிறது இதனால் கிழக்குகடற்கரை சாலையை இணைக்கும் சாலைகள் ஒவ்வொன்றிலும் வேகத்தடை அமைத்தால் பிரிவு சாலைகளிலிருந்து வரும் வாகனங்கள் வேகத்தைக்கட்டுப்படுத்துவதால் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க வாய்ப்புள்ளது எனவே பிரிவு சாலைகள் ஒவ்வொன்றிலும் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்
தொகுப்பு அதிரைவானவில்
0 comment(s) to... “அதிரையில் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்படுமா?”