முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்-பரபரப்பு
Posted December 03, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் என்பவர், இந்த பணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக செய்து தரும் வகையில் இருப்பதாகவும், பணியை தடுத்து நிறுத்த கோரியும், செலவிடும் ரூ.27 லட்சத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இருப்பினும் 2 மாதமாக அலட்சியமாக இருந்த பேரூராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு முன் 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.ஆனால் போதிய கால அவகாசம் இல்லை என்று ஆக்கிரமிப்பாளர்கள் கூறி வந்தனர்.
இந் நிலையில் நேற்று காலை திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது பேரூராட்சி பணியாளர்கள் மூலம் குடியிருப்பு பகுதியில் ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள பள்ளி அருகில் குடியிருப்புகளில் இருந்த ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டது. அங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே திரும்பிச் சென்றனர். இச் சம்பவத்தால் நேற்று முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்-பரபரப்பு ”