அதிரையில் கார்த்திகை தீபம் அகல் விளக்கு விற்பனை தீவிரம்(படங்கள்இணைப்பு)

Posted December 03, 2014 by Adiraivanavil in Labels:
 தமிழகத்தில் டிசம்பர் 5ம் தேதி கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுகிறது. தீபவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருகார்த்திகை அன்று வீடுகளில் வரிசையாக அகல் விளக்குகளை வைத்து தீபமேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். கோயில்களிலும் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். கார்த்திகை தீபத்திற்காக கடந்த 2 மாதங்களாக அகல் விளக்குகள் தயாரிக் கும் பணி தொடங்கியது. அண்மையில்
பெய்த மழையினால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முடங்கியது. நாகை ஆச்சாள்புரம், அரியலூர்,முத்துபேட்டை, ஆலங்காடு, விருத்தாசலம், திருவண்ணாமலை, கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை விதம் விதமாக செய்து வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கார்த்திகை தீபவிழா நெருங்கி கொண்டிருப்பதால் மக்கள் அகல் விளக்குகளை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகள் விற்பனை செய்யும் மணி என்பவர் கூறுகையில், கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்து விடும். தற்போது பெய்த கன மழையினால் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது வெயில் அடிப்பதால் உற்பத்தி அதிகமாகி அதிகமாக வரத் தொடங்கும். ரூ.1 முதல் ரூ.20 வரையில் அகல் விளக்குகள் சைஸ் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.அதிராம்பட்டினம்பகுதிகளில் அதிகளவில் அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர் என்றார்








0 comment(s) to... “அதிரையில் கார்த்திகை தீபம் அகல் விளக்கு விற்பனை தீவிரம்(படங்கள்இணைப்பு)”