அதிரையில் உடலில் வலிமையை அதிகரிக்கும் கூரல்கத்தாழை மீன் நெட்டி- வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி
Posted November 25, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் கொடுவா கூரல்கத்தாழை காளை ஆகிய மீன்களை தனி வலை பயன்படுத்தி பிடிப்பர்கள் இந்த மீன்கள் 10கிலோ முதல் 20கிலோவரை இருக்கும் கூரல்கத்தாழை மீன்களின் வயிற்றில் உள்ள நெட்டி என்ற உறுப்பை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் ஒரு கிலோ நெட்டி ரூ1லட்சத்துக்கு விற்கப்படுகிறது இந்த மீன்களை வாங்குவதற்கு போட்டி
அதிகம் இருக்கும் இதை வாங்குவதற்கு வாரம் ஒருமுறை கொல்கத்தா சென்னை போன்ற நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் இங்கு வருகின்றனர் நெட்டிகள் அமெரிக்கா லண்டன் மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த நெட்டிகளில் ஆண் மீனை விட பெண் மீனுக்கு விலை குறைந்து நிர்ணயம் செய்கின்றனர் இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில் கூரல்கத்தாழை மீன்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் 7 பெரிய நெட்டி ஒருகிலோ இருக்கும் ஆண் நெட்டி 1 லட்சத்துக்கும் பெண்நெட்டி 60 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது இந்த கூரல்கத்தாலை நெட்டி வாங்குவதற்க்கு அதிக போட்டி இருக்கும் குறிப்பாக கூரல்கத்தாழை நெட்டி ஆண்மைகுறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய மருந்து தயாரிக்கவும் பல்வேறு மருந்துகள் தயார் செய்யவும் பயன்படுத்திப்படுகிறது இது மட்டும் அல்லமல் ஸ்டார் ஒட்டல்களில் உயர் ரக சூப் உணவு தயார் செய்யவும் இந்த நெட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்றார்கள் 0 comment(s) to... “அதிரையில் உடலில் வலிமையை அதிகரிக்கும் கூரல்கத்தாழை மீன் நெட்டி- வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி”