விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும்கட்சி கூட்டத்தில் முடிவு
Posted November 21, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
கூட்டத்தில், வரும் 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கு பெறுவது. வரும் 23ம் தேதி முத்துப்பேட்டை வட்டார, நகர காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சிறுபான்மை பிரிவின் மாவட்ட தலைவர் ஹாஜா, வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் வடுகநாதன், நகர பொறுப்பாளர்கள் ஜெகபர் அலி, பேட்டை மஸ்தான், சந்திர மோகன், வட்டார பொறுப்பாளர்கள் எக்கல் இளவரசன், உதய தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாச்சிக்குளம் தாகிர் கூறுகையில், கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற் பொழுது காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளை கட்ட முயற்சி செய்து வருகிறது.
இது டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் செயல். இதனை கண்டித்து வருகிற 22ம் தேதி விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவு அளிக்கிறோம். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார, நகர தொண்டர்கள் இந்த போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும்கட்சி கூட்டத்தில் முடிவு”