அதிரை அருகே மாயமான 3 மீனவர்கள் மீட்பு...

Posted November 20, 2014 by Adiraivanavil in
அதிராம்பட்டினம் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் கேஆர் காலனியைச் சேர்ந்த திருமேனி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இரண்டாம்புலிக்காடு கிராமத்தைச்சேர்ந்த ராஜேந்திரன் வயது(55) பட்டுக்கோட்டைச் சேர்ந்த முனுசாமி வயது(55) அதிராம்பட்டினத்தைச்
சேர்ந்த லியாக்கத்அலி வயது(54)
ஆகியமூன்று மீனவர்களும் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு மின்பிடிக்க கடலுக்குச்சென்றனர் இந்நிலையில் அவர்கள் 18ந்தேதி காலை 6 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும் இருந்தும் இன்று வரை அவர்கள் கரை திரும்பவில்லை இதையடுத்து இவர்களது உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் கடலோர காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து கடலோரக்காவல் படை போலீஸார்கள் மீன்வளத்துறையினர் ஆகியோர் சக மீனவர்கள் உதவியுடன் காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது அவர்கள் சென்றிருந்த படகின் எஞ்சினில் கடலில் போட்டிருந்த மீன் வலை சிக்கி எந்திரக்கோளாறு ஏற்பட்டு மேற்க்கொண்டு கரைக்கு வரமுடியாமல் தவித்தபடி நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகை கடலோர காவலர்கள் அவர்களை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.


0 comment(s) to... “அதிரை அருகே மாயமான 3 மீனவர்கள் மீட்பு...”