
பட்டுக்கோட்டையில் நேற்று 300க்கும் மேற்பட்ட சாலை ஓர தரைக்கடை மற்றும் தட்டுவண்டி வியாபாரிகள் ஏஎஸ்பி டாக்டர் தீபாகாணிகேரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 200 குடும்பங்கள் பட்டுக்கோட்டையில் தரைக்கடை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். போக்குவரத்துக்கு
இடையூறு இன்றி வியாபாரம் செய்கிறோம். தரைக்கடைகளை காலி செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி எங்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் கடந்த 16 நாட்களாக பிழைப்பின்றி அவதிப்படுகிறோம். நாங்கள் கொள்முதல் செய்து வைத்திருந்த பழம் மற்றும் பொருட்கள் அழுகி சேதம் அடைந்து விட்டது. எனவே எங்கள் மீது கருணை கூர்ந்து எப்போதும் நாங்கள் கடை போட்டுள்ள இடத்தில் கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறோம்
.நன்றி தமிழ்முரசு