65 வயது மூதாட்டியின் கர்ப்பப்பையில் 8 கிலோ கட்டி தஞ்சை டாக்டர்கள் அகற்றினர்
Posted November 22, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்
65 வயது மூதாட்டியின் கர்ப்பப்பையில் இருந்த 8 கிலோ கட்டியை தஞ்சை டாக்டர்கள் அகற்றினர்.
65 வயது மூதாட்டி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி நாகரத்தினம் (வயது 65). இவருக்கு கடந்த 10 நாட்களாக அடி வயிற்றிலும், முதுகுத்தண்டு பகுதியிலும் வலி ஏற்பட்டு உள்ளது. மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிகிச்சைக்காக தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள என்.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது நாகரத்தினத்தின் கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
8 கிலோ கட்டி
அதன்படி மயக்க மருந்து நிபுணர் பிரபாகரன் மயக்க மருந்து கொடுத்தார். பின்னர் டாக்டர் தாமரைச்செல்வி, டாக்டர் சபரிபிரியதர்ஷினி மற்றும் குழுவினர் சுமார் 1¾ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நாகரத்தினம் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றினர். அப்போது அந்த கட்டி 7 கிலோ 850 கிராம் எடை கொண்டதாக இருந்தது. தற்போது அவர் நாகரத்தினம் நலமாக உள்ளார்.
இது குறித்து டாக்டர் தாமரைச்செல்வி கூறுகையில், நாகரத்தினம் கர்ப்பிணி பெண் போல் வந்தார். அவருக்கு வயிறு மிகவும் பெரிதாக இருந்தது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. வயிற்றில் இருந்த கட்டி அழுகும் நிலைக்கு வந்தால் இது போன்ற நிலை ஏற்படும். சினைப்பையில் தான் இது போன்ற பெரியகட்டிகள் இருந்து அகற்றப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பப்பையில் இவ்வளவு பெரிய கட்டி இருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாகரத்தினத்திற்கு சர்க்கரை நோயும் இருந்ததால் சர்க்கரை நோய் நிபுணர் மற்றும் இருதய நோய் நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது”என்றார்.நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “65 வயது மூதாட்டியின் கர்ப்பப்பையில் 8 கிலோ கட்டி தஞ்சை டாக்டர்கள் அகற்றினர்”