முத்துப்பேட்டை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

Posted November 21, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு சேக்கமுத்து தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் ராமநாதன், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் யோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் உமேஷ் பாபு, குமார், திருஞனாம் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய கிளை செயலாளராக முனியப்பன், துணை செயலாளராக சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த ஆட்சியில் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இதுநாள் வரை செயல் படுத்தவில்லை. இதனை உடன் செயல் படுத்த வேண்டும். முத்துப்பேட்டை பகுதியில் யூரியா, பொட்டாஸ் உரங்கள் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனே கூட்டுறவு அங்காடிகளில் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டும். உதயமார்த்தாண்டபுரம் பகுதியில் செல்லும் களனி வாய்க் காலை உடன் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நன்றி தினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு”