அதிரை அருகே கடலில் மீன் பிடிக்கச்சென்ற 3மீனவர்கள் மாயம் 5 நாட்கள் ஆகியும் கரைதிரும்பவில்லை (தேடும்பணி தீவிரம்)

Posted November 29, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தைச்சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்குச்சொந்தமான படகில் பிள்ளையார்திடலைச் சேர்ந்த வீரப்பன் வயது(40) மனோரவைச் சேர்ந்தவர் நாகூரான் மறவக்காட்டைச் சேர்ந்த
முருகப்பன் வயது(55) ஆகிய மூவரும் கடந்த 25-ந்தேதி காலை மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச்சென்றனர் இந்நிலையில் புதன்கிழமை கரை திரும்பவேண்டிய அவர்கள் இன்று வரை கரைதிரும்பவில்லை இதையடுத்து சேதுபாவசத்திரம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் மற்றும் மல்லிப்பட்டினம் மீன் துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் கடலோர காவல் படை போலீஸார்கள் மற்றும் சக மீனவர்கள் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

செய்தி அதிரை வானவில் நிருபர்



0 comment(s) to... “அதிரை அருகே கடலில் மீன் பிடிக்கச்சென்ற 3மீனவர்கள் மாயம் 5 நாட்கள் ஆகியும் கரைதிரும்பவில்லை (தேடும்பணி தீவிரம்)”