பட்டுக்கோட்டையில் நாய்களுக்கு கு.க.!!!!

Posted November 18, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில் கால்நடை கணக்கெடுப்பு பணியின் கீழ் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களின் எண்ணிக்கை 2237 என கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.இதில் முதற்கட்டமாக 1237 நாய்களுக்கு ஏற்கனவே இனப்பெருக்க அறுவை சிகிச்சையும், வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட மாக நகரில் பொது இடங்களில் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு இனப்பெருக்க அறுவை சிகிச்சையும், வெறி நாய்க்கடி தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் அச்சயா, துப்புரவு அலுவலர் மூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இப்பணி தஞ்சாவூர் யசோதா தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெருக்களில் தெருநாய்கள் தொந்தரவு இருந்தால் நகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவும். தகவல் தொடர்புக்கு நகராட்சி அலுவலக தொலைபேசி எண். 04373 & 252097.நன்றி தமிழ்முரசு


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நாய்களுக்கு கு.க.!!!!”