முத்துப்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted November 26, 2014 by Adiraivanavil in Labels:


முத்துப்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. செயல் வீரர்கள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வட்டார, நகர காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வைரவநாதன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் முகமதுமைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகைதீன்பிச்சை வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் துரைவேலன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைத்தலைவர் தாகிர், மாவட்ட பொது செயலாளர்கள் வீரமணி, பகுருதீன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் காஜா, மாணவர் காங்கிரஸ் தலைவர் அன்பழகன், வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

துணைமின்நிலையம்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில் பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும், முத்துப்பேட்டையில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும், வருகிற 10-ந் தேதி சோனியாகாந்தி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர நிர்வாகிகள் ஜெகபர்அலி, பேட்டை மஸ்தான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன்பிச்சை, பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோமாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரசேகரன் நன்றி கூறினார்.நன்றி தினத்தந்தி 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை காங்கிரஸ் வலியுறுத்தல்”