பட்டுக்கோட்டையில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

Posted November 15, 2014 by Adiraivanavil in Labels:
 பட்டுக்கோட்டை,நவ.15:தஞ்சை மாவட்டத்தில் தொடரும் யூரியா உரத் தட்டுப்பாட்டால் தனியார் கடைகளில் வரிசையில் நின்று யூரியா வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசி னர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட் டம் வருவாய் கோட்டாட்சி யர் அரங்கநாதன்
தலை மையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயி பொன்னவராயன்கோ ட்டை வீரசேனன் பேசுகை யில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேலாகியும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை.
இதனால் நாற்று விடும் பணியை கூட தொடங்க முடியவில்லை. நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு இட யூரியாவுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எந்த தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத் திலும் உரம் இருப்பு இல்லை. ஏரி, குளங்கள் முறையாக து�ர்வாரப்படவில்லை. இப்பணியில் முறைகேடு நடந்துள்ளது. யூரியா இல்லாததால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத் தில் 15 சதவீத நெல் உற்பத்தி குறை யும். எனவே யூரி யாவை தட் டுப்பாடு இல் லாமல் அளி க்க வேண்டும் என்றார்.
விவசாயி தம்பிக்கோட்டை ராஜராமலிங்கம் என்பவர் பேசுகையில், 3வது ஆண்டாக பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 30,000 ஏக்கருக்கு மேலான நிலம் தரிசாக கிடக்கிறது.
பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் எந்த ஏரிக் கும் தண்ணீர் வரவில்லை. எங்கும் பாச னம் நடக்கவில்லை. யூரியா இருப்பு இல்லை என்றார்.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தொட ர்ந்து இதே நிலை நீடித்தால் பஞ்சம் பிழைக்க வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதிருக்கும் என்றும், தற் கொலை மற்றும் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி யில்லை என்று ஆவேசப்பட் டனர்.
உரக்கடையில் வரிசையில்
நிற்க வேண்டிய அவலம்
விவசாயி ஆத்திக்கோட்டை நித்தியானந்தம் பேசு கையில், விவசாயிகள் யாருக்குமே உரம் கிடைக்கவில்லை. இப்போதுதான் உரம் போடும் தருணம். கூட்டுறவு சங்கங்களில் கிடைக்காத உரம் தனியார் கடைகளில் கிடைக்கிறது. அதிலும் பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் உரக்கடையில் கூடுதலான விலைக்கு விற்கப்பட்ட யூரியாவும் சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது போல வரிசையில் நிற்க வைத்து விற்றனர்.
அதிலும் உரக்கடை ஊழியர்கள் தடியை வைத்துக்கொண்டு விவசாயிகளை வரிசையில் நிற்க வைத்தது மிகவும் வேதனையாக இருந்தது என்றார்.நன்றி தினகரன்


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்”