முத்துப்பேட்டை அருகே தீவிபத்தில் வீடு சாம்பல்

Posted November 29, 2014 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேது ரோட்சை சேர்ந்தவர் ஜெய ராமன்(42). விவசாயி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி, பீரோ போன்ற பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலானது.
இது குறித்து முத்துப்பேட்டை எஸ்ஐ சாமிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். வருவாய் துறையினர் அங்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தீவிபத்தில் வீடு சாம்பல்”