முத்துப்பேட்டையில் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்ப தமுமுக முடிவு
Posted November 27, 2014 by Adiraivanavil in Labels: த.மு.மு.க.
இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தை மீட்க கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முத்துப்பேட்டையில் இருந்து 250க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து வரும் டிசம்பர் 2ம் தேதி முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் முகமது அலீம், மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது பைசல், நகர செயலாளர் சீமான், நகர துணை தலைவர் யாசீன், பொருளாளர் தாவுதுஷா, துணை செயலாளர் நிசார், மருத்துவ அணிசெயலாளர் முகமது நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “ முத்துப்பேட்டையில் ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்ப தமுமுக முடிவு”