அதிரை கடலில் தாய்பால் அதிகம் சுரக்கும் மருத்துவ குணம் கொண்ட காரைமீன்கள் - மீனவர்கள் வலையில்
Posted November 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஒருவார தினங்களாக காரைமீன்கள் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்குகின்றன. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட காரைமீன்கள் சீசன் துவங்கியுள்ளது. காரைமீன்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும் என்பதால் பிரசவமான பெண்களுக்கு கொடுக்கிறார்கள். மேலும் இந்த காரைமீன்கள் வளர்ப்பு இறால்கள்
மற்றும் கோழிகளுக்கு தீவனங்களாக பயன்படுகிறது அதாவது இந்த காரைமீன்கள் அதிகம் புரதச்சத்து உள்ளது என்பதால் இதை உலர்த்தி சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு உள்ள ஆலைகளில் பொடிசெய்து தீவனங்களாக தயார்செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் இறால் பண்ணைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த தீவனங்களை இறால் மற்றும் கோழிப்பண்ணைகளில் போடுவதால் இதை உண்பதன் மூலம் கோழி மற்றும் இறால்கள் வளர்ச்சியடைந்து எடையும் அதிகரிக்கின்றன. இதுபற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில் இந்த காரைமீன்கள் அதிராம்பட்டினம் கடற்பகுதி சேற்றுப்பகுதி என்பதால் இந்தப்பகுதியில் உற்பத்தியாகின்றன. தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அதிகளவில் வலையில் பிடிபடுகின்றன. இதில் கொழுப்பு சத்து குறைவானது என்பதால் கொலஸ்ரால் அதிகம் உள்ளவர்களும் சாப்பிடலாம் இது மருத்துவகுணம் கொண்டது என்பதால் அதிகம் பேர் வாங்கிச்செல்கின்றனர் இது கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதனால் மீனவர்களுக்கு லாபம் அதிகம் இருப்பதில்லை என்றார்
தொகுப்பு அதிரைவானவில்
0 comment(s) to... “ அதிரை கடலில் தாய்பால் அதிகம் சுரக்கும் மருத்துவ குணம் கொண்ட காரைமீன்கள் - மீனவர்கள் வலையில்”