பட்டுக்கோட்டை அருகே சுவர் இடிந்து வாலிபர் பலி

Posted November 16, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை கிராமம் புதுநகரை சேர்ந்த சீனிவாசன் மகன் உமாபதி (27). இவர் நேற்று அதே கிராமத்தில் ஹபீப்ரஹ்மான் என்பவருக்கு சொந்த மான கடப்பா குடோன் காம்பவுண்ட் சுவர் அருகே தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது திடீரென காம் பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவருக்கு அடியில் சிக்கி உமாபதி இறந்தார்.இதுகுறித்து பட்டுக்கோட் டை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி தினகரன்


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே சுவர் இடிந்து வாலிபர் பலி”