வாசன் கட்சி துவக்க விழா பேராவூரணி தொகுதியில் இருந்து 150 வாகனங்களில் செல்ல முடிவு

Posted November 22, 2014 by Adiraivanavil in Labels:
வாசன் கட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள பேராவூரணியில் இருந்து 150 வாகனங்களில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பேராவூரணியில் வாசன் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ ரெங்கராஜன், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஜி.கே.வாசன் தொடங்கும் புதிய கட்சியில் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட வட்டார, நகர மற்றும் கிராம வார்டு கமிட்டி, இளைஞர்காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக விலகி சேர்வது, வரும் 28ம் தேதி திருச்சியில் நடைபெறும் கூட்டத்திற்கு பேராவூரணி தொகுதியிலிருந்து 150 வாகனங்களில் செல்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முத்துராமலிங்கம், வட்டார தலைவர்கள் முருகன், சங்கர், நகரத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மாமுண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்நன்றி தமிழ்முரசு .


0 comment(s) to... “ வாசன் கட்சி துவக்க விழா பேராவூரணி தொகுதியில் இருந்து 150 வாகனங்களில் செல்ல முடிவு”