Posted November 22, 2014byAdiraivanavilin
Labels:
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் சோத்திரியம் கீழத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன்(56). விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பில் இரும்பு வேலி அடைத்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து வேலியில் விழுந்தது. இதை அறியாமல் வீரபாண்டியன் வேலியை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்தார். பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.நன்றி தமிழ்முரசு
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகேவேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப சாவு”