முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவை வேட்டை 2 பேர் கைது

Posted November 24, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு பகுதியில் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் தலைமையில் வன சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் அயூப்கான், வன காவலர்கள் கென்னடி, மாரிமுத்து, சிவநேசன், குமார், செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காப்புக்காடு என்ற பகுதியில் அவ்வழியாக வந்த தொண்டியக்காடு புதுக்குடி பகுதியை சேர்ந்த சாம்பசிவம்(45), ராஜாகோபால்(50) ஆகியோரிடம் சோதனை நடத்தினர். இதில் அவர்களிடமிருந்து கூழக்கிடா, 2 உள்ளான் பறவைகள் இருந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் வலை விரித்து பறவைகளை பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவை வேட்டை 2 பேர் கைது”