பட்டுக்கோட்டையில் விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டம்
Posted November 17, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக கொண்டிக்குளம், கழுகபுளிக்காளடு, பில்லங்குழி, நடுவிக்கோட்டை ஆகிய 4கிராம பொதுமக்கள் உரம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் எங்களுக்கு யூரியா உரம் தட்டுபாடின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை அந்த 4 கிராமத்தை சேர்ந்த 500க்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கொண்டிக்குளம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் முன் நடுரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை & அறந்தாங்கி மெயின்ரோட்டில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கூறுகையில், இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 5 ஆயிரம் விவசாயிகளை திரட்டி அரசுக்கு எதிராக மிகபெரிய போராட்டம் நடத்துவோம் என்றனர்.
பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே படடுக்கோட்டை & அறந்தாங்கி மெயின்ரோட்டில் சாலை மறியல் செய்த விவசாயிகள்.நன்றி தமிழ்முரசு
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டம்”