அதிரையில்அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகையால்-ரோந்து பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)
Posted November 16, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கியுள்ளதால் வனத்துறை ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி அடர்ந்த அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இக்காட்டிற்கு வருடந்தோறும் அக்டோபர் மாதம் அமெரிக்கா
, ஆஸ்திரேலியா, சைபிரியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, பர்மா, ஐரோப்பா என 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து குளக்கிடா, செங்கால்நாரை, பூநாரை, சாம்பல்நாரை, நத்தகொத்தி நாரை, பாம்புதாரா, வரித்தலை வாத்து, பனங்கொட்டை சிறவி, வெள்ளை அரிவாள் மூக்கான், நீர்காகம், மயில்கால் கோழி என பலவிதமான நீர்பறவைகள் இரைத்தேடி வந்து செல்கிறது.

, ஆஸ்திரேலியா, சைபிரியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, பர்மா, ஐரோப்பா என 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து குளக்கிடா, செங்கால்நாரை, பூநாரை, சாம்பல்நாரை, நத்தகொத்தி நாரை, பாம்புதாரா, வரித்தலை வாத்து, பனங்கொட்டை சிறவி, வெள்ளை அரிவாள் மூக்கான், நீர்காகம், மயில்கால் கோழி என பலவிதமான நீர்பறவைகள் இரைத்தேடி வந்து செல்கிறது.
இப்போது பறவைகளுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை உருவாகி இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வர தொடங்கியுள்ளது. பறவைகளை பாதுகாக்க திருவாரூர் மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து முத்துப்பேட்டை வன சரகர் ராதாகிருஷ்ணன் வனவர் அயூப்கான் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிராம்பட்டினம் ராஜாமடம், ஏரிப்புறக்கரை, பழஞ்சூர், துவரங்குறிச்சி, மழவேனிற்காடு, சுந்தரநாயகிபுரம் ஆகிய பகுதிகளில் பறவைகள் மேச்சலில் ஈடுபட்டிருக்கும்போது யாரும் பறவைகளை வேட்டையாடுகிறார்களா? என படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் பறவைகளை வேட்டையாடினால் வன உயிரின சட்டப்படி 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரோந்து பணி தீவிரம் நன்றி தினகரன்

0 comment(s) to... “அதிரையில்அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகையால்-ரோந்து பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)”