முத்துப்பேட்டை அருகே போலீஸ் தடியடி-3 பேருக்கு அரிவாள் வெட்டு கண்டித்து சாலை மறியல்

Posted November 22, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை கண்டித்து சாலைமறியல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அம்மளூரை சேர்ந்தவர்கள் அன்பரசு, கபிலன், விக்ரமன். வேன் 
டிரைவர்கள். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாதேவன், மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மகாதேவன், மணிகண்டன் ஆகிய இருவரும் அம்மளூர் கடைத்தெருவில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அன்பரசு உள்பட மூவரும் அவர்களை வழிமறித்து தகராறு செய்தனர்.
ஆத்திரமடைந்த மகாதேவன், மணிகண்டன் ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் மூவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த மூவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அம்மளூர் கடைத்தெருவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி கணபதி, எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதில் டிஎஸ்பி கணபதி கீழே விழுந்தார். அதனை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் மகாதேவன், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதன் காரண மாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நன்றி தமிழ்முரசு 




0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே போலீஸ் தடியடி-3 பேருக்கு அரிவாள் வெட்டு கண்டித்து சாலை மறியல்”