அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்வோரின் களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!
Posted November 25, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இடையில் சாலை ஓர உணவகத்தில் அனைத்து பேருந்துகளும் ஒரு 10-15 நிமிடம் நின்று செல்லும். அப்போது நாம் வெளியில் இறங்கினால் கண்டிப்பாக சொல்லி இறங்குவது நல்லது. கீழ் காணும் சம்பவம் ஒரு பாடம்
தமுமுகவின் 100வது ஆம்புலன்ஸில் ஒரு நோயாளி திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். திருச்சியைத் தாண்டி பாலாஜி பவன் எனும் ஓட்டலில் நள்ளிரவு 2 மணியளவில் தேநீர் குடிக்க நிறுத்தப்படுகிறது. அப்போது அங்கே எஸ்.ஆர். டிராவல்ஸ் பேருந்து ஒன்று நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது. நீண்ட நேரம் ஹாரன் அடித்த நிலையில் பேருந்து புறப்படுகிறது.
பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒருவர் அங்கு வந்து, பதறியபடி அங்குள்ளவர்களிடம் தனியார் பேருந்து குறித்து விசாரிக்கிறார். பேருந்து சென்றுவிட்டது என்று கூறப்பட அவர் பதறியபடி ‘அய்யய்யோ அதில் என் மனைவி உள்ளார்; நான் என்ன செய்வது?’ என்று புலம்புகிறார். அவரிடம் உங்கள் மனைவி பேருந்து ஓட்டுநரிடம் கூறியிருக்கலாமே என்று கூற, தனது மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவரிடம் சொல்லவில்லை என்றும், கழிவறைக்கு சென்று வருவதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டதே என்கிறார்.
இப்போது என்ன செய்யலாம் என கூற, மனைவியிடம் தன்னுடைய செல்போன் இருக்கிறது அவருக்கு போன் செய்தால் பேருந்தை நிறுத்திவிடுவார் என்று கூறுகிறார். உடனே அந்த எண்ணுக்கு போன் செய்கிறார்கள். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு உறக்கத்தில் இருந்த அவரது மனைவி போனில் பேசுகிறார். நடந்தவைகளை அந்த நபர் கூறி, பேருந்தை உடனடியாக நிறுத்த சொல்லுமாறும், வேறு வாகனத்தின் உதவியுடன் அவ்விடத்திற்கு வருவதாகவும் கூற, அவரது மனைவியும் பேருந்து ஓட்டுநரிடம் நடந்தவற்றைக் கூறி பேருந்தை நிறுத்துமாறு கூறுகிறார்.
பேருந்தை 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விராலிமலை டோல்கேட்டில் நிறுத்துவதாகவும், அவரது கணவரை உடனே அங்கு வரச்சொல்லுமாறும் ஓட்டுநர் கூறுகிறார்.
தன்னை குறிப்பிட்ட பகுதியில் கொண்டு செல்லுமாறு தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் அதே பதற்றத்துடன் வேண்டுகிறார். அவரது நிலையை நேரில் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உடனடியாக அவரை ஏற்றிக்கொண்டு விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த, தனியார் பேருந்தும் அவ்விடத்திற்கு வந்து சேருகிறது.
தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மனமார்ந்த நன்றி கூறியபடி தனியார் பேருந்தில் ஏறுகிறார் அந்த நபர்.
இந்த நிகழ்விலிருந்து நாம் பெறவேண்டிய #படிப்பினை
தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ பேருந்துகளில் பயணித்தால் கழிவறைக்குச் செல்லும்போது குடும்பத்தினரிடமோ அல்லது உடன் பயணம் செய்யும் பயணிடமோ கண்டிப்பாக கூறவும். அவர்கள் உறக்கத்தில் இருந்தால் பேருந்து ஓட்டுநரிடமோ அல்லது நடத்துனரிடமோ கூறிவிட்டுச் செல்லவும்.
0 comment(s) to... “அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்வோரின் களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!”