அதிரை அருகேகார்த்திகை சோமவார விழாவையொட்டி பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலில் இன்று நள்ளிரவு நடைதிறப்பு

Posted November 17, 2014 by Adiraivanavil in Labels:
கார்த்திகை சோமவார விழாவையொட்டி பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலில் இன்று நள்ளிரவு நடைதிறக்கப்படுகிறது.
அதிரை அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் சோமவாரத்துடன்(திங்கட்கிழமை) கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. எனவே இன்று இன்று நள்ளிரவு சரியாக 12 மணியளவில் மத்திய புரீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்படும். அதை தொடர்ந்து வருகிற 24ம் தேதி 2வத சோமவார திருவிழாவும், டிசம்பர் 1ம் தேதி 3 வது சோமவார திருவிழாவும், 8ம் தேதி 4வது சோமவார திருவிழாவும், 15ம் தேதி 5வது சோமவார திருவிழாவும் நடைபெறுகிறது.
டிசம்பர் 22ம் தேதி விடையாற்றி உற்சவ விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறந்து மறுநாள் காலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும். வருடத்தில் ஒரு நாள் பொங்கல் பண்டிகை அன்று மட்டும் இந்த கோயிலில் பகலில் நடை திறந்திருக்கும். சோமவார நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பேராவூரணி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்தும் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோமவார திருவிழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக பொதுஆவுடையாருக்கு செலுத்தி வழிபடுவர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர்கள் எஸ்.சடகோ பராமானுஜம், எஸ்.ஆர்.ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை மக்கள் செய்து வருகின்றனர்.நன்றி தமிழ்முரசு
கார்த்திகை சோமவார விழா


0 comment(s) to... “அதிரை அருகேகார்த்திகை சோமவார விழாவையொட்டி பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலில் இன்று நள்ளிரவு நடைதிறப்பு”