பேராவூரணி அருகே துணிகரம் -சென்னை பேராசிரியையை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு

Posted November 19, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி, நவ. 19&
சென்னை அனகாபுத் தூரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சுதா. குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியரை கைடாக கொண்டு பிஎச்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டை வந்திருந்தார்.
பின்னர் தஞ்சை மாவட் டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் கைகாட்டியில் உள்ள உறவினரான ஓமியோபதி டாக்டர் மகாலிங்கம் வீட்டில் தங்கியிருந்தார். நேற்றிரவு மகாலிங்கம் வீட்டில் அனை வரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டு கதவை சாத்தாமல், கிரில் கேட்டை மட்டும் இழுத்து மூடி தாழ்பாள் மட்டும் போட்டிருந்தனர்.
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், ஹாலில் படுத்திருந்த சுதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன் றார். சுதா திடுக்கிட்டு எழுந்து சத்தம் போட்டார். கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரை தாக்கிய கொள்ளை யன், செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் காயமடைந்த சுதா, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏஎஸ்பி தீபா கரோனிகர் மற்றும் போலீ சார் அங்கு சென்று விசா ரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து செயினை பறித்துச் சென்ற கொள்ளையனை தேடிவருகின்றனர். நன்றி தமிழ் முரசு  


0 comment(s) to... “பேராவூரணி அருகே துணிகரம் -சென்னை பேராசிரியையை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு ”