அதிரை அருகேபொதுஆவுடையார் கோயில் சோமவார விழா திரளான பக்தர்கள் தரிசனம்
Posted November 20, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
டிசம்பர் 1ம் தேதி 3 வது சோமவார திருவிழாவும், 8ம் தேதி 4வது சோமவார திருவிழாவும், 15ம் தேதி 5வது சோமவார திருவிழாவும் நடைபெறுகிறது. டிசம்பர் 22ம் தேதி விடையாற்றி உற்சவ விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறந்து மறுநாள் காலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும். வருடத்தில் ஒருநாள் பொங்கல் பண்டிகைய ன்று மட்டும் பகலில் நடை திறந்திருக்கும். விழாவையொட்டி தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ் வச திகள் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர் கள் ஏராளமானோர் வந்து நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், எஸ்.ஆர்.ராமானுஜம் மற் றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகேபொதுஆவுடையார் கோயில் சோமவார விழா திரளான பக்தர்கள் தரிசனம்”