அண்ணா சிங்காரவேலு பக்கம் - கவிதை

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
அன்பிற்கினிய அதிரை வானவில் வாசகர்ளே....
நமது அதிரை வானவில் இணையதளத்தில் அதிரை மண்ணின் மைந்தர் அண்ணா சிங்கார வேலு அவர்களின் கவிதைகள் இனி தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. 
அண்ணா சிங்காரவேலு பற்றி ஒரு உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம், தெரியாத சில வாசகர்களுக்கு ஓர் சிறிய அறிமுகம்...
இவர் இயக்குனர் விசு அவர்கள் சன் டிவியில் நடத்திய அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்காக ஆறு வருடம் தேர்வுக்குழுவில் பணியாற்றியவர், பல முண்ணனி பிரபலங்கள் சினிமா சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஊடகத்துறையில் பணியாற்றி அனுபவமிக்கவர், அதுமட்டுமின்றி பேச்சரங்க நிகழ்ச்சிகளுக்காக பல வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் பெருநகரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவர்,
எல்லாவற்றிற்கும் மேலாக மேதகு டாக்டர் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை சந்தித்து இவரது கவிதையை படித்துபார்த்து வெகுவாக பாராட்டினார், பட்டிமன்ற நடுவராக உலகெங்கும் நகைச்சுவையுடன் கூடிய சிந்தனை மிக்க நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருப்பவர், அவரின் கவிதைகளை இனி தொடர்ந்து அதிரைவானவில் வாசகர்களுக்காக வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்....

இதோ அவரது கவிதை...

குஜராத் - 1

வீட்டிற்கு
வந்தவர்களை
உள்ளே அழைத்து 
நலம் விசாரிக்கலாம்

வீட்டிற்குள்
இருந்தவர்களை
உள்ளே இழுத்து
நிலம் விசாரிக்கலாமா?

குஜராத் - 2

இயற்கை சீற்றத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
இனபேதம் பார்க்காமல்
இரத்தம் கொடுத்தோம்.

கொடுத்தது 
எங்கள் இரத்தமா?
என்பதைப் பிறகு
வெட்டிப்பார்த்து
உறுதிப்படுத்திக் கொண்டோம்.



0 comment(s) to... “அண்ணா சிங்காரவேலு பக்கம் - கவிதை”