பேராவூரணியில் மாணவ– மாணவிகளுக்கு சைக்கிள்–மடிகணினி: வைத்திலிங்கம் வழங்கினார்

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா தஞ்சை கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி வரவேற்று பேசினார்.
விழாவில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருமகளூர், களத்தூர், புனல்வாசல், திருச்சிற்றம்பலம், பள்ளத்தூர், குருவிக்கரம்பை ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1531 பேருக்கு விலையில்லா சைக்கிள்களையும், 1521 பேருக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவைகளை வழங்கி அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.
விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர் பாபு, பேரூராட்சி தலைவர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மா.கோவிந்தராஜன், கி.வைரவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பழனியம்மாள் சாமியப்பன், அருநம்பி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோ, மாவட்ட மாணவரணி இனைச் செயலாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் நீலகண்டன், பேரூராட்சி உறுப்பினர்கள் டாக்டர் சீனிவாசன், கோபால், ஆனந்தன், முன்னாள் உறுப்பினர் பால்பக்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் அப்துல் ஜபார், சேகர், ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் பாலசுப்பிரமணியன், குருவிக்கரம்பை துணைத் தலைவர் சசிகலா ராமசாமி, நகர அவைத்தலைவர் சுந்தர்ராஜன் கூட்டுறவு சங்க இயக்குநர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கஜானா தேவி, தலைமையாசிரியர்கள் மனோகரன், பன்னீர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் செய்து இருந்தனர். 






0 comment(s) to... “பேராவூரணியில் மாணவ– மாணவிகளுக்கு சைக்கிள்–மடிகணினி: வைத்திலிங்கம் வழங்கினார்”