அதிரையில் 3-ம் ஆண்டு ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

Posted September 28, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதிரையை சார்ந்த தன்னார்வல இளைஞர்களின் கூட்டு முயர்ச்சியில் 3 ம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் தொலைக்காட்சி திரைப்பட நடிகர் ஏ. முஹம்மது அமீருதீன் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உரையாற்றினார்கள்.முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் தனது கணீர் குரலில் வரவேற்புரை ஆற்றினார். இதில் இந்தியாவில் முஹலாயர் ஆட்சி செய்த காலத்தில் இந்து - முஸ்லீம் பிரிவினை ஏற்பட காரமணமாக அமைந்தது குறித்து எடுத்துரைத்தது நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹைலைட்டாக அமைந்தது.விழா முடிவில் காதிர் முகைதீன் கல்லூரி அரபித்துறை தலைவர் மவ்லவி முஹம்மது இத்ரீஸ் நன்றி கூறினார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் - அரசு அலுவலர்கள் -  சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - பத்திரிகையாளர்கள் - மாணவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை ஈத்மிலன் கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் செய்யப்பட்டது



.















0 comment(s) to... “அதிரையில் 3-ம் ஆண்டு ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ”