முத்துப்பேட்டை பகுதியில் கால்நடைத்துறை சார்பில் தமிழக அரசின் கால்நடைகளுக்கு 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று செப்டம்பர் 01 முதல் துவங்கி வருகிற செப்டம்பர் 21 வரை நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.கே.பி.நடராஜன் முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு தடுப்பூசி அட்டைகளை வழங்கினார். இதில் ஏராளமான மாடுகளுக்கு 9-வது சுற்று தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் கங்கா சூடன், சந்தோஷ், முயல்வி, கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை உதவி பராமரிப்பாளர்கள் தமிழ்செல்வி, ரஷியா, வீரமணி, ராஜேந்திரன், கமலதாசன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை